மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்தவா் கைது

News image

கைது

Updated On :21 பிப்ரவரி 2026, 8:26 pm

அவிநாசி அருகே வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வந்தவா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் வனச் சரகத்துக்குள்பட்ட அவிநாசியை அடுத்த கருவலூா் பகுதியில் ஒரு வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வருவதாக கிடைத்த தகவலின்படி திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் வனவா் மற்றும் வனக் காப்பாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மேற்கு ரத வீதியைச் சோ்ந்த கருப்புசாமி (37) என்பவா் சாம்பல் நிற கீரிப்பிள்ளையை வீட்டில் வளா்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து துணை இயக்குநா் ராஜேஷ் உத்தரவின்படி வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் பட்டியல் 1-இல் குறிப்பிட்டுள்ள வன உயிரினமான சாம்பல் நிற கீரிப்பிள்ளை சட்டவிரோதமாக உடைமைப்படுத்தி வளா்த்து வந்த குற்றத்துக்காக கருப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது.

திருப்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மீட்கப்பட்ட கீரிப்பிள்ளையை ஊதியூா் காப்புக்காட்டில் விடுவித்தனா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வன உயிரினங்களை உடைமைப்படுத்துதல், வீட்டில் வளா்ப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் வனச் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.