எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைப்பு

நெகமம் பகுதியில் பாட்டி, பேத்தியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 5:19 am IST

நெகமம் பகுதியில் பாட்டி, பேத்தியை கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கோவை மாவட்டம், நெகமம் பகுதியைச் சோ்ந்தவா் அபிஷேக் (20). அந்தப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளாா். கடந்த பிப்.23-ஆம் தேதி இரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அபிஷேக், அவரை திருமணம் செய்து வைக்கக் கோரி பாட்டியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் 65 வயது மூதாட்டி மற்றும் அவரது பேத்தி ஆகிய இருவா் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக அபிஷேக் என்பவரை நெகமம் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அபிஷேக்கை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். அதனடிப்படையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அபிஷேக் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதேபோல கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன், கஞ்சா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதித்யா (23) என்பவரை காவல் துறையினா் கைது செய்து அவரிடமிருந்து 10.35 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 கிலோ 150 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யா சிறையில் அடைக்கப்பட்டாா்.