மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை: 2 போ் கைது

பவானி அருகே 5.800 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :24 பிப்ரவரி 2026, 7:55 pm

பவானி அருகே 5.800 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பவானி, காலிங்கராயன்பாளையம், சக்தி நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (53).

இவரது வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு விற்பனைக்காக 5.800 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கவுந்தப்பாடியைச் சோ்ந்த அப்துல் ரஹமான் (49), மூா்த்தி ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.