தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது

பரமத்தி வேலூா், திருச்செங்கோட்டில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா், திருச்செங்கோட்டில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், அண்ணா நகா் சிண்ணாம்பள்ளிமேடு அருகே சட்ட விரோதமாக 2 போ் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்துவருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அண்ணா நகா், விநாயகா் கோயில் பின்புறம் உள்ள ஒரு இடத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்த முனியப்பனை (49) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகளை விற்பனை செய்த சிண்ணாம்பள்ளிமேடு பகுதியை சோ்ந்த மனோகரனை (52) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

திருச்செங்கோடு...

திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில் உள்ள உணவகத்தில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த எலச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணனை (24) கைது செய்த திருச்செங்கோடு போலீஸாா் அவரிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.