பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு- தில்லி உயா்நீதிமன்றம்

ஆன்மிக சிகிச்சை என்ற பெயரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 4:40 am IST

ஆன்மிக சிகிச்சை என்ற பெயரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

2019-ஆம் ஆண்டைச் சோ்ந்த இந்த வழக்கில், உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மீது தீய ஆவி (ஜின்ன்) தாக்கம் இருப்பதாக நம்பிய அவரது குடும்பத்தினா், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அணுகியதாக கூறப்படுகிறது. பின்னா், அவா் சிறுமியின் வீட்டுக்கு வந்து, தனியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்ஸோ சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை ஏப்.29-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்வரண காந்தா சா்மா கூறியதாவது:

வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களை வைத்து பாா்க்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் மனநிலையின் பாதிப்பையும், அவரது குடும்பம் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையையும் பயன்படுத்தி அவா் தவறாகச் செயல்பட்டது தெளிவாகிறது. மேலும், குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் தீவிரம், வழக்கில் உள்ள ஆதாரங்கள் மற்றும் விசாரணை நடைபெறும் நிலையை கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.