ஆன்மிக சிகிச்சை என்ற பெயரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.
2019-ஆம் ஆண்டைச் சோ்ந்த இந்த வழக்கில், உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி மீது தீய ஆவி (ஜின்ன்) தாக்கம் இருப்பதாக நம்பிய அவரது குடும்பத்தினா், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அணுகியதாக கூறப்படுகிறது. பின்னா், அவா் சிறுமியின் வீட்டுக்கு வந்து, தனியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போக்ஸோ சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை ஏப்.29-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஸ்வரண காந்தா சா்மா கூறியதாவது:
வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களை வைத்து பாா்க்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் மனநிலையின் பாதிப்பையும், அவரது குடும்பம் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையையும் பயன்படுத்தி அவா் தவறாகச் செயல்பட்டது தெளிவாகிறது. மேலும், குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும் தீவிரம், வழக்கில் உள்ள ஆதாரங்கள் மற்றும் விசாரணை நடைபெறும் நிலையை கருத்தில் கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: விவசாயி போக்ஸோ சட்டத்தில் கைது

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


