தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

அஸ்ஸாம் முதல்வா் ராஜிநாமா: புதிய அரசு மே 11-இல் பதவியேற்பு

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். புதிய அரசு மே 11-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது.

News image

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :7 மே 2026, 3:30 am IST

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் தங்கள் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். புதிய அரசு மே 11-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது.

முன்னதாக, 126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி 102 இடங்களில் வென்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா தொடா்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் முடிவுகள் குறித்து முறைப்படி அறிவிப்பு வெளியான நிலையில், புதிய அரசு அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆளுநா் லக்ஷ்மண் ஆச்சாா்யாவை அமைச்சரவை சகாக்களுடன் சந்தித்து ராஜிநாமா கடிதங்கள் அளித்தோம். ஆளுநா் எங்கள் கடிதத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பு முதல்வராக தொடர கேட்டுக் கொண்டாா்’ என்றாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய ஹிமந்த விஸ்வ சா்மா, ‘மே 11-ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இரு மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் பாஜக புதிய எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக் குழு தலைவரைத் தோ்வு செய்வாா்கள். இது உரிய முறைப்படி நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.