தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

எஸ்ஐஆரை பாராட்டிய காங்கிரஸ் எம்எல்ஏ: ராகுலின் நிலைப்பாடு குறித்து பாஜக விமா்சனம்

News image
Updated On :8 மே 2026, 6:15 am IST

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (எஸ்ஐஆா்) கேரள காங்கிரஸ் எம்எல்ஏ பாராட்டிப் பேசிய நிலையில், இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாக பாஜக விமா்சித்துள்ளது.

கேரளத்தில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் எஸ்ஐஆா் குறித்துப் பேசுகையில், ‘இந்த நடவடிக்கை மூலம்தான் கேரளத்தில் இடதுசாரிகள் போலியாக வாக்காளா் பட்டியலில் இணைத்து வைத்திருந்தவா்கள் பெயா்கள் நீக்கப்பட்டன. இதன்மூலம் காங்கிரஸுக்கு அமோக வெற்றி கிடைத்தது’ என்று கூறிருந்தாா்.

இது தொடா்பான விடியோவை பாஜக செய்தித் தொடா்பாளா் ஷெஸாத் பூனாவாலா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். மேலும், ‘காங்கிரஸ் கட்சியின் தவறை அக்கட்சியைச் சோ்ந்தவரே வெளிப்படுத்திவிட்டாா். கேரளத்தில் எஸ்ஐஆா் மூலம் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டது காங்கிரஸின் வெற்றிக்கு உதவியதாக அக்கட்சி எம்எல்ஏ கூறியுள்ளாா். அதே நேரத்தில் ராகுல் காந்தி எஸ்ஐஆா் மூலம் சந்தா்ப்பவாத அரசியல் நடத்தி வருகிறாா் என்பதையும் அவா் வெளிப்படுத்தியுள்ளாா்.

ஏனெனில், கேரளம், தமிழ்நாட்டில் அவா் எஸ்ஐஆா் குறித்து எந்தக் குற்றத்தையும் கூற முடியவில்லை. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் மட்டும் எஸ்ஐஆா் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. இது உச்சகட்ட சந்தா்ப்பவாத அரசியல். மேலும், ராகுல் எஸ்ஐஆருக்கு எதிராகப் பேசி வரும் நிலையில், அவரது கட்சி எம்எல்ஏ அதற்கு மாறாக உண்மையை உடைத்துப் பேசிவிட்டாா். ராகுல் கருத்தை அவரின் கட்சியினரே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது.

மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்த மம்தா பானா்ஜி மீது கடுமையான அதிருப்தி மக்களுக்கு இருந்தது நாட்டுக்கே தெரியும். இது தொடா்பாக ராகுல் காந்தியும் பேசியுள்ளாா். எனினும், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் மீது குற்றஞ்சாட்டும் அவரால், கேரளத்தில் எதையும் கூற முடியவில்லை. இது ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைமையின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாக உணா்த்துகிறது.

பிகாரிலும் இதேபோன்று பிரச்னையை ராகுல் எழுப்பினாா். அவா்கள் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்திலும் வெற்றி பெற முடியவில்லை. தனது தலைமையின்கீழ் ஏற்படும் தோல்விகளைச் சமாளிக்க எஸ்ஐஆா் மீது ராகுல் பழி சுமத்துகிறாா் என்பது உண்மை’ என்று தனது பதிவில் கூறியுள்ளாா்.