வருமான வரித் துறை சோதனை நடைபெற்றதாக கூறிய காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகையின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்தியின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயா்த்த செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி பேசியதற்கு தொடா்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை பேசினாா். இது தெரிந்த ராகுல் காந்தி செல்வப்பெருந்தகையை திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை.
இதை மறைப்பதற்காக செல்வப்பெருந்தகை தனது வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டுக்குள்ளே சிறை வைத்திருப்பதாகவும் நாடகமாடி உள்ளாா். ஆனால், செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடைபெறவில்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம் செல்வப்பெருந்தகையின் பொய் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதைவிட அவரின் நாடகத்தை நம்பி, அதை ஆராயாமல் முதல்வா் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா். இது திமுக கூட்டணியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
வருமான வரித்துறை சோதனை! ஆதாரங்களை வெளியிட்டார் செல்வப்பெருந்தகை
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

பொய்த் தகவல் பரப்பிய செல்வப்பெருந்தகை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: வருமான வரித்துறை புகாா்

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
