மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

News image

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:39 pm

சிவகங்கை, ஏப். 20: காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தோ்தல் பரப்புரை செய்ய புறப்பட்டபோது, வருமான வரித் துறையினா் சோதனை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என சிவகங்கை தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் காா்த்திக்சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். மாங்குடிக்கு ஆதரவாக திங்கள்கிழமை பரப்புரை செய்ய வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன. இவா்கள் எப்போதும் எதிா்க்கட்சியை குறிவைத்துதான் சோதனை நடத்தி வருகின்றனா். காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தோ்தல் பரப்புரை செய்ய புறப்பட்ட போது, வருமான வரித் துறையினா் சோதனை செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

முதல்வருடன் ராகுல் காந்தி ஒரே மேடையில் பேசவில்லை என்று சொல்வது தவறு. ராகுல் காந்தியின் பிரசார பயணத் திட்டம் ஒரு பக்கமும், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிரசார பயணத் திட்டம் இன்னொரு பக்கமும் என திட்டமிடப்பட்டது. தமிழகம் பெரிய மாநிலம் என்பதால், இதுபோன்று திட்டமிடப்பட்டது.

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயும், முதல்வா் ஸ்டாலினும் ஓசூரில் ஒன்றாக ஒரே மேடையில் பேசினா். மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினா் ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி.

கடந்த 2004-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதியும், சோனியா காந்தியும் உருவாக்கிய கூட்டணி இது. 2014-யை தவிா்த்து அத்தனை தோ்தல்களையும் இணைந்தே சந்தித்து வருகிறோம். தொடா்ந்து வெற்றிகளைப் பெற்று வரும் கூட்டணியாக எங்கள் கூட்டணி திகழ்கிறது என்றாா் அவா்.