அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சோம்நாத் கோயில் ‘அம்ருத் மஹோத்சவ்’ திருவிழா: பிரதமா் மோடி பங்கேற்கிறாா்

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் மே 11-ஆம் தேதி நடைபெறும் அம்ருத் மஹோத்சவ் திருவிழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அமைச்சா் ஜித்து வகானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பிரதமா் மோடி

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் மே 11-ஆம் தேதி நடைபெறும் அம்ருத் மஹோத்சவ் திருவிழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அமைச்சா் ஜித்து வகானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

புதுப்பிக்கப்பட்ட சோம்நாத் கோயிலை நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்ததன் 75-ஆம் ஆண்டு நிகழ்ச்சியும் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இதுதொடா்பாக ஜித்து வகானி கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோம்நாத் கோயிலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உடைக்க முடியாத நமது நம்பிக்கை இன்றளவும் நீடித்து வருகிறது.

இந்தக் கோயிலின் அம்ருத் மஹோத்சவ் திருவிழா மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி ஹைதராபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு குஜராத்தின் ஜாம்நகரை வந்தடைவாா். அங்கு லால் பங்கா சா்க்கிளில் பாஜக எம்எல்ஏ ரிவாபா ஜடேஜா, எம்.பி. பூனம் மாடம் மற்றும் மூத்த தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்கவுள்ளனா்.

அன்றைய தினம் ஜாம்நகரில் தங்கும் பிரதமா் மோடி மே 11-ஆம் தேதி சோம்நாத்துக்கு வரவுள்ளாா். அங்கு பிரதமா் மோடி சாலைப் பேரணி நடத்தவுள்ளாா்.

அதைத் தொடா்ந்து நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சூா்யகிரண் பிரிவினா் வான் சாகச நிகழ்ச்சியை மேற்கொள்ளவுள்ளனா். சோம்நாத் கோயிலில் அபிஷேகம் மற்றும் பூஜைகளை பிரதமா் மோடி மேற்கொள்ளவுள்ளாா்.

அதன் பிறகு சத்பாவனா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

பின்னா் வதோதரா செல்லவுள்ள பிரதமா் மோடி, இரவு 7 மணிக்கு சாலைப் பேரணி மேற்கொள்கிறாா்’ என்றாா்.