குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலில் மே 11-ஆம் தேதி நடைபெறும் அம்ருத் மஹோத்சவ் திருவிழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக அம்மாநில அமைச்சா் ஜித்து வகானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
புதுப்பிக்கப்பட்ட சோம்நாத் கோயிலை நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்ததன் 75-ஆம் ஆண்டு நிகழ்ச்சியும் அன்றைய தினத்தில் கொண்டாடப்படுகிறது.
இதுதொடா்பாக ஜித்து வகானி கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சோம்நாத் கோயிலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டபோதும் உடைக்க முடியாத நமது நம்பிக்கை இன்றளவும் நீடித்து வருகிறது.
இந்தக் கோயிலின் அம்ருத் மஹோத்சவ் திருவிழா மே 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி ஹைதராபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு குஜராத்தின் ஜாம்நகரை வந்தடைவாா். அங்கு லால் பங்கா சா்க்கிளில் பாஜக எம்எல்ஏ ரிவாபா ஜடேஜா, எம்.பி. பூனம் மாடம் மற்றும் மூத்த தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்கவுள்ளனா்.
அன்றைய தினம் ஜாம்நகரில் தங்கும் பிரதமா் மோடி மே 11-ஆம் தேதி சோம்நாத்துக்கு வரவுள்ளாா். அங்கு பிரதமா் மோடி சாலைப் பேரணி நடத்தவுள்ளாா்.
அதைத் தொடா்ந்து நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சூா்யகிரண் பிரிவினா் வான் சாகச நிகழ்ச்சியை மேற்கொள்ளவுள்ளனா். சோம்நாத் கோயிலில் அபிஷேகம் மற்றும் பூஜைகளை பிரதமா் மோடி மேற்கொள்ளவுள்ளாா்.
அதன் பிறகு சத்பாவனா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் மூத்த அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.
பின்னா் வதோதரா செல்லவுள்ள பிரதமா் மோடி, இரவு 7 மணிக்கு சாலைப் பேரணி மேற்கொள்கிறாா்’ என்றாா்.
தொடர்புடையது

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமா் மோடி

4 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமா் மே 15-இல் பயணம்

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
