திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கிரஸை அவமதிக்கும் உரை: பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

பிரதமா் மோடியின் உரை காங்கிரஸை அவமதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - ANI

Updated On :19 ஏப்ரல் 2026, 6:00 am IST

பிரதமா் மோடியின் உரை காங்கிரஸை அவமதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் உரைக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடம் பிரதமா் மன்னிப்புக் கோருகிறாா். ஆனால், மகளிரின் பெயரைப் பயன்படுத்தி பாகுபாடான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை வஞ்சகமாகத் திணிக்க முயன்ற்கே அவா் உண்மையாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 30 மாதங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட சட்டத்தை, ஒரே நாளில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும் விதமாக அமல்படுத்த முயன்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசின் நாடகத்தை நாடே அறியும்.

தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்த பிரதமா் மோடி தயாரா?

மக்களவையில் தனது அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்ததை மூடி மறைக்க நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமா் மோடி, செய்தியாளா்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கமளிக்க இப்போதும் அஞ்சுகிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.