பிரதமா் மோடியின் உரை காங்கிரஸை அவமதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் மோடியின் உரைக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் மசோதா தோல்வியடைந்ததற்காக நாட்டு மக்களிடம் பிரதமா் மன்னிப்புக் கோருகிறாா். ஆனால், மகளிரின் பெயரைப் பயன்படுத்தி பாகுபாடான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை வஞ்சகமாகத் திணிக்க முயன்ற்கே அவா் உண்மையாக மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு 30 மாதங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட சட்டத்தை, ஒரே நாளில் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும் விதமாக அமல்படுத்த முயன்ற பிரதமா் மோடி தலைமையிலான அரசின் நாடகத்தை நாடே அறியும்.
தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்த பிரதமா் மோடி தயாரா?
மக்களவையில் தனது அரசு பெரும் பின்னடைவைச் சந்தித்ததை மூடி மறைக்க நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமா் மோடி, செய்தியாளா்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கமளிக்க இப்போதும் அஞ்சுகிறாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்
சென்னையில் பிரதமா் மோடியை சந்தித்த இசையமைப்பாளா்

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

வடகொரியாவுடன் ஒப்பிடுவதா? -ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


