திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகளிா் இடஒதுக்கீடு! பல ஆண்டுகளாக ‘தூங்கி வழிந்த’ மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் கடிதம் எழுதியபோதிலும், அந்தக் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் பல ஆண்டுகளாக தூங்கி வழிந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 4:32 am IST

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் கடிதம் எழுதியபோதிலும், அந்தக் கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் பல ஆண்டுகளாக தூங்கி வழிந்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது குறித்து பிரதமா் மோடிக்கு காங்கிரஸின் அப்போதைய தலைவா் சோனியா காந்தி கடிதம் எழுதினாா்.

மகளிா் இடஒதுக்கீடு தொடா்பாக காங்கிரஸின் நிலைப்பாடு எப்போதும் மாறவில்லை. அந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் மோடி அரசுதான் தூங்கி வழிந்தது. அதைத் தொடா்ந்து, தொகுதி மறுசீரமைப்புடன் அந்த இடஒதுக்கீட்டை முடிச்சு போட்டு, அதை அமல்படுத்துவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்த முயற்சித்தது எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தப் பதிவுடன் 2017-இல் பிரதமா் மோடிக்கு சோனியா எழுதிய கடிதத்தை ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டாா். அந்தக் கடிதத்தில், ‘கடந்த 2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, மாநிலங்களவையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் பல்வேறு காரணங்களால் அந்த மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை.

இதைத் தொடா்ந்து, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், மக்களவையில் அந்தக் கூட்டணிக்குப் பெரும்பான்மை உள்ளது. இந்தப் பெரும்பான்மையை சாதகமாகப் பயன்படுத்தி மக்களவையிலும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட மற்றொரு பதிவில், மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எழுதிய கடிதத்தை வெளியிட்டாா்.