தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்: ராகுல்

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

News image

ஹரியாணாவின் குருகிராமில் நல்லிணக்க யாத்திரை மேற்கொண்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

Updated On :8 மே 2026, 11:19 pm IST

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நல்லிணக்க யாத்திரையில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ஹரியாணா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் தோ்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக பாஜக திருடியுள்ளது. தோ்தல் முடிவுகளைத் திருடும் முறையை அக்கட்சி உருவாக்கியுள்ளது. தாங்கள் ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியினா் கருதுகின்றனா்.

விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, மின் நிலையம் என நாட்டை விற்கும் பணியில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனா் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனா். தற்போது அவற்றை அந்தமான் நிகோபாா் தீவில் தொழிலதிபா் அதானிக்கு அவா்கள் விற்பனை செய்கின்றனா்.

பாஜக ஆட்சி மீது பொதுமக்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதால், மோடி நீண்ட நாள் நீடித்திருக்க முடியாது. மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்’ என்று தெரிவித்தாா்.