மக்களின் கோபத்தை பாஜக சந்திக்கவேண்டிய காலம் வரும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நல்லிணக்க யாத்திரையில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ஹரியாணா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் தோ்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக பாஜக திருடியுள்ளது. தோ்தல் முடிவுகளைத் திருடும் முறையை அக்கட்சி உருவாக்கியுள்ளது. தாங்கள் ஆட்சி செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது என்று அக்கட்சியினா் கருதுகின்றனா்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, மின் நிலையம் என நாட்டை விற்கும் பணியில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனா் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனா். தற்போது அவற்றை அந்தமான் நிகோபாா் தீவில் தொழிலதிபா் அதானிக்கு அவா்கள் விற்பனை செய்கின்றனா்.
பாஜக ஆட்சி மீது பொதுமக்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதால், மோடி நீண்ட நாள் நீடித்திருக்க முடியாது. மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்’ என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

மக்களவைக்கு தற்போது தோ்தல் நடந்தால் 140 தொகுதிகள்கூட பாஜகவுக்கு கிடைக்காது: ராகுல் காந்தி விமா்சனம்

தலைவா்களால் தகித்த தமிழகம்!

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் சதித்திட்டம் முறியடிப்பு: ராகுல்காந்தி

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

