மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கடந்த 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இவா், மேற்கு வங்க தோ்தலுக்கு முன் இந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கான சிறப்பு பாா்வையாளராக பணியாற்றியவா்.
இதேபோல், முதல்வரின் தனிச் செயலராக கடந்த 2017-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரி சாந்தனு பாலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தின் வாக்காளா் எண்ணிக்கை 6.81 கோடியாக குறைந்தது.
இந்த விவகாரத்தை தோ்தல் பிரசாரத்தில் மம்தா பானா்ஜி முக்கியமாக எழுப்பினாா். எனினும், அது எடுபடவில்லை.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி சனிக்கிழமை பதவியேற்றாா். இந்தச் சூழலில், முதல்வரின் ஆலோசகா் மற்றும் தனிச்செயலா் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருவரும் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?

மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
