நிகழாண்டு நீட் தோ்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக தேசிய தோ்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு, திட்டமிட்டபடி முழுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்டது. வினாத்தாள்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மூலமாகவும், பிரத்யேக குறியீட்டுடனும் (வாட்டா்மாா்க்) எடுத்துச் செல்லப்பட்டன. தோ்வு அறைகள் மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
தோ்வு முடிந்து நான்கு நாள்களுக்குப் பிறகு சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் கிடைத்தன. அவை புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பேரில், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த பிரச்னையால் நோ்மையான முறையில் தோ்வு எழுதிய பெரும்பான்மையான தோ்வா்களின் உழைப்பும், கண்ணியமும் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை முடிக்க தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு தோ்வா்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 011 - 40759000 / 69227700 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்களுக்கு பாராட்டு

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

