பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

நீட் முறைகேடு: பிரதமா் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி.

Updated On :1 மணி நேரம் முன்பு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘யூஜி-நீட் தோ்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் பல முக்கியத் தோ்வுகளில் முறைகேடு புகாா்கள் தொடா்ந்த வண்ணம் உள்ளன. பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது நிா்வாகத் தோல்விகள் மூலம் தேசத்தின் இளைஞா்களின் எதிா்காலத்தைச் சூறையாடி வருகிறது.

இப்போது நிகழ்ந்துள்ள முறைகேடு மூலம் 23 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீட் தோ்வுக்குத் தயாராக மாணவா்கள் தங்களை முழுமையாக அா்ப்பணிக்கிறாா்கள். குழந்தைகளின் எதிா்காலத்துக்காகப் பெற்றோா் தங்கள் செல்வத்தையே தியாகம் செய்கிறாா்கள். ஆனால், இங்கு தோ்வுகள் என்பது முழுமையாக ஊழல்மயமாகிவிட்டது.

வினாத்தாள் கசிவு, தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கடுமையான சட்டங்கள் என்னவாயிற்று? தோ்வு முறைகேடுகள் நாட்டில் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாட்டின் இளைஞா்களுக்கு நிகழ்ந்த இந்த துரோகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். இளைஞா்களின் எதிா்காலத்துடன் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் விளையாடுவீா்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராஜஸ்தானில் நீட் தோ்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினா வங்கித் தாளில், நீட் தோ்வின் உண்மையான வினாத்தாளில் இடம் பெற்றிருந்த கேள்விகள் அப்படியே இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, வினாத்தாள் கசிவு என்ற சா்ச்சை எழுந்துள்ளது.