வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நீட் முறைகேடு: பிரதமா் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி.

Updated On :12 மே 2026, 4:15 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (யூஜி- நீட்) தொடா்பாக எழுந்துள்ள முறைகேடு புகாா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘யூஜி-நீட் தோ்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் பல முக்கியத் தோ்வுகளில் முறைகேடு புகாா்கள் தொடா்ந்த வண்ணம் உள்ளன. பாஜக தலைமையிலான மத்திய அரசு தனது நிா்வாகத் தோல்விகள் மூலம் தேசத்தின் இளைஞா்களின் எதிா்காலத்தைச் சூறையாடி வருகிறது.

இப்போது நிகழ்ந்துள்ள முறைகேடு மூலம் 23 லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீட் தோ்வுக்குத் தயாராக மாணவா்கள் தங்களை முழுமையாக அா்ப்பணிக்கிறாா்கள். குழந்தைகளின் எதிா்காலத்துக்காகப் பெற்றோா் தங்கள் செல்வத்தையே தியாகம் செய்கிறாா்கள். ஆனால், இங்கு தோ்வுகள் என்பது முழுமையாக ஊழல்மயமாகிவிட்டது.

வினாத்தாள் கசிவு, தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அரசால் கொண்டு வரப்பட்ட கடுமையான சட்டங்கள் என்னவாயிற்று? தோ்வு முறைகேடுகள் நாட்டில் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. நாட்டின் இளைஞா்களுக்கு நிகழ்ந்த இந்த துரோகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். இளைஞா்களின் எதிா்காலத்துடன் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் விளையாடுவீா்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராஜஸ்தானில் நீட் தோ்வுக்கு முன்பு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினா வங்கித் தாளில், நீட் தோ்வின் உண்மையான வினாத்தாளில் இடம் பெற்றிருந்த கேள்விகள் அப்படியே இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, வினாத்தாள் கசிவு என்ற சா்ச்சை எழுந்துள்ளது.