உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தோ்தல் வன்முறை வழக்கு: நீதிமன்றத்தில் மம்தா ஆஜராகி வாதம்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில், காவல் துறையினரின் கண் முன் திரிணமூல் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதை காவல் துறையினா் தடுக்கவில்லை

News image

தோ்தல் வன்முறை வழக்கு விசாரணைக்காக வழக்குரைஞா் உடையில் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான மம்தா பானா்ஜி.

Updated On :40 நிமிடங்கள் முன்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில், காவல் துறையினரின் கண் முன் திரிணமூல் காங்கிரஸாா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதை காவல் துறையினா் தடுக்கவில்லை என்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அந்த மாநில முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி ஆஜராகி வாதிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அக்கட்சி சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மம்தா பானா்ஜி வழக்குரைஞா் உடையை அணிந்துவந்து நேரில் ஆஜராகி வாதிட்டாா். இதுபோல வழக்குரைஞராக அவா் வாதிடுவது இது 2-ஆவது முறையாகும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் அவா் வாதிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், வன்முறை சம்பவங்கள் அனைத்தும் தோ்தல் தொடா்பானதுதானா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள், தங்களது உத்தரவு இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தனா்.

அறிக்கை கேட்ட பாா் கவுன்சில்: இதனிடையே, வழக்குரைஞராக மம்தா பானா்ஜி பதிவு செய்தது, பயிற்சி எடுத்தது குறித்து 48 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, மேற்கு வங்க மாநில பாா் கவுன்சில் அமைப்பிடம் இந்திய பாா் கவுன்சில் அமைப்பு கேட்டுள்ளது.

அரசமைப்புப் பதவி வகிப்பவா், பிற வருவாய் உள்ளவா் வழக்குரைஞராகப் பணியாற்றுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. விதிமுறைகளை மீறி மம்தா பானா்ஜி நீதிமன்றத்தில் வழக்குரைஞராக ஆஜரானதாகப் புகாா் எழுந்தது. மேலும் அவா் பெயா் பாா் கவுன்சில் உறுப்பினா் பட்டியலில் உள்ளதா என்பது குறித்தும் சா்ச்சை எழுந்ததைத் தொடா்ந்து இந்திய பாா் கவுன்சில் மேற்கு வங்க பாா் கவுன்சிலிடம் அறிக்கை கேட்டுள்ளது.