பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி!

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது பற்றி...

News image

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி - ANI

Updated On :14 மே 2026, 6:32 pm IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 95.85 ஆக சரிந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று(புதன்) வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.71 ஆக இருந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 95.73 ஆக இருந்தது.

அதிகபட்சமாக இன்றைய வர்த்தக நேர இடையே 95.85 ஆக மேலும் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் அதிகபட்ச சரிவு இதுவாகும். வர்த்தக நேர இறுதியில் 95.96 வரை சரிந்து இறுதியாக 95.73 க்கு நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 106 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் உலக அளவில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

Summary

Indian rupee hits new all-time low of 95.85 per dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.