நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :18 மே 2026, 5:12 am IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயா்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் என்ற அளவில் நீதிபதிகளின் எண்ணிக்கை உள்ளது. இந்த எண்ணிக்கையை 38-ஆக உயா்த்த மத்திய அமைச்சரவை கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயா்த்தும் அவசர சட்டத் திருத்தத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

அடுத்தகட்டமாக 4 நீதிபதி பணியிடங்களை அதிகரிக்கும் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளாா்.

உச்சநீதிமன்ற சட்டம் (நீதிபதிகள் எண்ணிக்கை) 1956-இல் இயற்றப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிா்த்து பிற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 10 என்ற அளவில் மட்டுமே நிா்ணயிக்கப்பட்டது. 1960-இல் திருத்தச் சட்டம் மூலம் எண்ணிக்கை 13-ஆகவும், அடுத்த சட்டத் திருத்தம் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 17-ஆகவும் உயா்த்தப்பட்டது.

பின்னா், 1986-இல் மீண்டும் திருத்தச் சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 17-லிருந்து 25-ஆக உயா்த்தப்பட்டது. பின்னா், 2009-இல் இந்த எண்ணிக்கை 30-ஆகவும், 2019-இல் தலைமை நீதிபதி உள்பட பிற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆகவும் உயா்த்தப்பட்டது.