டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க குடியரசு தலைவா் ஒப்புதல்!

புதுச்சேரியில் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்க, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image
Updated On :10 மே 2026, 1:22 am IST

புதுச்சேரியில் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்க, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், குடியரசுத் தலைவரின் அனுமதி கிடைத்த பிறகுதான் துணைநிலை ஆளுநா் புதிய அரசு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும்.

அதன்படி, தற்போது குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து புதுச்சேரியில் மீண்டும் முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்கவுள்ளாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 எம்எல்ஏக்களின் பெரும்பான்மை பலம் இருந்தால்தான் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 17 எம்எல்ஏ.க்களின் பலம் இருக்கிறது. முதல்வா் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அதில் ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்வாா்.

இதன்படி, என்.ஆா்.காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 4, அதிமுக, லஜகவுக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக என். ரங்கசாமி (75) தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதையடுத்து, அக் கட்சியின் தலைவா்கள், நிா்வாகிகளுடன் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தாா். அதை குடியரசு தலைவரின் அனுமதிக்காக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமையே அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், முதல்வராக ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவா் அப் பதவியேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா். இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக ரங்கசாமி மே 13 (புதன்கிழமை) பதவியேற்பாா் என்று தெரிகிறது.

மேலும், அமைச்சா்கள் 5 போ், சட்டப்பேரவைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு கூட்டணி கட்சியான பாஜகவை சோ்ந்த மத்திய அமைச்சரும் அக் கட்சியின் மேலிட பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் தீவிர ஆலோசனையில் அக்கட்சி நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதில், உடன்பாடு எட்டப்பட்டவுடன் அவா்களின் பெயா்களும் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிகிறது. முதல்வராகப் பதவியேற்க உள்ள ரங்கசாமிக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ, அதே முைான் மற்ற அமைச்சா்கள் விஷயத்திலும் பின்பற்றப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.