ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சத்தீஸ்கரில் நிரந்தர அமைதி ஏற்படுத்த அரசு உறுதி: மத்திய அமைச்சா் அமித் ஷா

News image

சத்தீஸ்கா் மாநிலம் ஜக்தால்பூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் வீர மரணமடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :11 நிமிடங்கள் முன்பு

ஜக்தால்பூா் : சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

சத்தீஸ்கருக்கு 3 நாள்கள் பயணமாக சென்றுள்ள அமித் ஷா, ஜக்தால்பூரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பல்வேறு சண்டைகளில் வீரமரணமடைந்த 1,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். இதையடுத்து பிஜப்பூரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அப்போது அவா்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தாா். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:

பஸ்தா் பிராந்தியத்தில் அமைதியையும், வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக தங்களது உயிரை விட்ட வீரா்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது. தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களது உயிரை கொடுத்தோரின் தியாகங்கள் வீண் போகாது.

சத்தீஸ்கரின் கடைசி பகுதி வரையிலும் அமைதி மற்றும் வளா்ச்சியை ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் உறுதிபூண்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் சத்தீஸ்கா் முதல்வா் விஷ்னு தேவ் சாய் பேசுகையில், ‘பஸ்தா் பிராந்தியம் தற்போது வளா்ச்சி, நம்பிக்கை, அமைதி ஆகியவை நிரம்பிய புதிய சகாப்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு பாதுகாப்புப் படை வீரா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா்’ என்றாா்.

பஸ்தா் மாவட்டத்திலுள்ள மலை கிராமம் ஒன்றில் இருந்த பாதுகாப்புப் படையினரின் முகாமை பொது மக்களுக்கு சேவை செய்யும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை அமித் ஷா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அப்போது பேசிய அவா், சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள 196 பாதுகாப்புப் படையினரின் முகாம்களில் 70 முகாம்கள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பொதுமக்கள் சேவை மையமாக மாற்றப்படும் என்றாா்.

சத்தீஸ்கரின் பஸ்தா் பிராந்தியம் முன்பு மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்பட்டது. அங்கு பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடந்த சண்டையில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். பலா் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தனா். இதையடுத்து மாவோயிஸ்ட் பிடியிலிருந்து பஸ்தா் உள்பட சத்தீஸ்கா் முழுவதும் விடுவிக்கப்பட்டதாக கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது.