இதுவரை, சாலைகளில் வழிசொல்லும் செயலிகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக செய்யறிவுடன் இயங்கும் துல்லியமான ஜிபிஎஸ் வழிசொல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐஐடி சென்னை மற்றும் விஐடி வேலூர் என இரண்டு கல்வி நிறுவனங்களும் இணைந்து, புதிய செய்யறிவுடன் இணைந்து இயங்கும் வழிசொல்லும் ஜிபிஎஸ் அமைப்பை உருவாக்கி சாரதனை படைத்துள்ளன.
ஒரு சாலையில் இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றும், அந்த சாலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் இதுவரை ஜிபிஎஸ் மூலம் அறிந்துவந்தோம். ஆனால், திரும்ப வேண்டிய சாலைக்கு மிக அருகில் இருக்கிறோமா? நமது வாகனம் சாலைக்கு நடுவில் இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்பதையும் இனி துல்லியமாக அறிய முடியும் என்கின்றன தகவல்கள்.
இதனால், தவறான சாலையில் திரும்பாமல் இருக்கவும், திரும்ப வேண்டிய சாலையில் சரியாக திரும்பவும், தவறான பாதையில் திரும்புவதற்கு முன்பே அறிந்துகொள்ளவும் முடியும்.
தற்போதுவரை சாலையின் இடதுபக்கத்தில் அல்லது வலதுபக்கத்தில் வாகனம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. இனி, சாலையில் எந்தப் பக்கத்தில் வாகனம் இருக்கிறது என்பதைகூட துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A GPS that works accurately with the help of Seyarivi has been invented.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

ராணிப்பேட்டை: 51 இடங்களில் தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் - எஸ்.பி. இயக்கி வைத்தாா்

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள்: கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்








