நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடைகளையும் செவ்வாய்க்கிழமை (மே 20) வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் அதை பல்வேறு மாநில சங்கங்கள் நிராகரித்துள்ளன.
இதனால்அனைத்து மருந்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திறந்திருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இ-மருந்தகங்களின் செயல்பாடுகளை ஒழுங்காற்ற முறையான விதிகளை வகுக்கக் கோரியும் சில்லறை மருந்துக் கடைகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தியும் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதனிடையே அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கத்துடன் மத்திய மருந்துகள் தரநிா்ணய கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக, பொதுமக்களின் நலன் கருதி மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், லடாக், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மருந்து விற்பனையாளா் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்தன.
இதன் காரணமாக அனைத்து மருந்துக் கடைகளும் மே 20-ஆம் தேதி திறந்திருக்கும் எனத் தெரிவித்தன.










