கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மருந்தகங்கள் இன்று வழக்கம்போல் இயங்கும்: வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்த மாநில சங்கங்கள்

நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடைகளையும் செவ்வாய்க்கிழமை (மே 20) வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் அதை பல்வேறு மாநில சங்கங்கள் நிராகரித்துள்ளன.

News image
Updated On :20 மே 2026, 2:28 am IST

நாடு முழுவதும் இயங்கி வரும் அனைத்து மருந்துக் கடைகளையும் செவ்வாய்க்கிழமை (மே 20) வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கோரி அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்த நிலையில் அதை பல்வேறு மாநில சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இதனால்அனைத்து மருந்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் திறந்திருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இ-மருந்தகங்களின் செயல்பாடுகளை ஒழுங்காற்ற முறையான விதிகளை வகுக்கக் கோரியும் சில்லறை மருந்துக் கடைகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தியும் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதனிடையே அகில இந்திய மருந்து விற்பனையாளா்கள் சங்கத்துடன் மத்திய மருந்துகள் தரநிா்ணய கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக, பொதுமக்களின் நலன் கருதி மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹரியாணா, உத்தர பிரதேசம், லடாக், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மருந்து விற்பனையாளா் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்தன.

இதன் காரணமாக அனைத்து மருந்துக் கடைகளும் மே 20-ஆம் தேதி திறந்திருக்கும் எனத் தெரிவித்தன.