தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அதிகார அரசியல் மூலம் வளமை மறுசீரமைப்பு: ராணுவ தலைமைத் தளபதி

அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

News image

உபேந்திர துவிவேதி

Updated On :20 மே 2026, 1:43 am IST

அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை, ராணுவத்தின் துல்லியமான செயல்பாடு, பொருளாதார உறுதிப்பாடு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த தேசிய செயல்பாடாக்கியது.

தற்போது ஒழுங்கின்மை, அவநம்பிக்கை, கூட்டணி நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாடு என நம்மைச் சுற்றியுள்ள உலகம் சிக்கலான சமிக்ஞையை காட்டுகிறது.

அதிகார அரசியலை ஒழிக்கும் வளமையான உலகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகார அரசியல் மூலம் வளமையை மறுசீரமைக்கும் உலகில் நாம் வாழ்கிறோம்.

உலக அளவில் நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கு செய்யப்படும் செலவு மொத்தம் 2.7 டிரில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.261 லட்சம் கோடி) தாண்டியுள்ளது. பாதுகாப்புக்கும் வளமைக்கும் இருந்த எல்லை இனி இருக்காது. உலகில் தற்போது நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதப் படைகள் மட்டுமின்றி தொழில்துறை உற்பத்தி, ஆராய்ச்சி அமைப்புகள், நிா்வாக கட்டமைப்புகளுக்கும் நீடித்த தேவைகளை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளன என்று தெரிவித்தாா்.