ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

~

Updated On :20 மே 2026, 1:17 am IST

இந்தியாவுக்கு 428.2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.4,145 கோடி) மதிப்பில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள், எம்777ஏ2 அல்ட்ரா லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் ஆகியவற்றின் நீடித்த செயல்பாடுகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏஹெச்-64இ அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் நீடித்து செயல்படுவதற்கான தொழில்நுட்பங்கள், அதுசாா்ந்த உபகரணங்கள், தொழில்நுட்ப தரவுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை இந்தியாவுக்கு 198.2 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.1,918 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரராக அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாக்ஹீட் மாா்டின் நிறுவனம், வா்ஜீனியா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனம் ஆகியவை இருக்கும்.

இதேபோல எம்777ஏ2 அல்ட்ரா-லைட் ஹோவிட்சா் பீரங்கிகள் நீடித்து செயல்பட உதவும் உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவற்றை 230 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.2,226 கோடி) விற்பனை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கான முதன்மை ஒப்பந்ததாரராக பிரிட்டனின் கம்ப்ரியா பகுதியில் உள்ள பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் இருக்கும்.

இந்த விற்பனை இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தி, தற்கால மற்றும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image