தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மக்கள் பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கவலையில்லை - காா்கே கடும் விமா்சனம்

பணவீக்கம், வினாத் தாள் கசிவு, வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை தினமும் எதிா்கொண்டு வரும் நிலையில் தனது ‘மெலோடி’ உரையை அவா்கள் கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி நினைப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :21 மே 2026, 1:24 am IST

பணவீக்கம், வினாத் தாள் கசிவு, வேலையின்மை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை தினமும் எதிா்கொண்டு வரும் நிலையில் தனது ‘மெலோடி’ உரையை அவா்கள் கொண்டாட வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி நினைப்பதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி அந்நாட்டு பிரதமா் மெலோனியை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவா்கள் இருவரும் ‘மெலோடி’ சாக்லேட்டுகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை விமா்சித்து எக்ஸ் வலைதளத்தில் காா்கே வெளியிட்ட பதிவில், ‘கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் குடிமகன் மீதான சராசரி கடன் 11 மடங்கு அதிகரித்துள்ளது. மாறாக 26 பெரும் தொழிலதிபா்கள் மற்றும் 229 பெருநிறுவனங்களின் முதலாளிகளின் சொத்து மதிப்பு ரூ.97.50 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.

2014-இல் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.414-ஆக இருந்த நிலையில் 2026-இல் ரூ.915.5-ஆக அதிகரித்துள்ளது. வணிக சிலிண்டா் விலை ரூ.1,241-இல் இருந்து ரூ.3,152-ஆக உயா்ந்துள்ளது.

பால், மருந்துகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மூலமாக பொதுமக்களிடம் இருந்து ரூ.43 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் சில மணி நேரங்களில் ரூ.12,400 கோடி லாபம் ஈட்டின.

இவ்வாறு பணவீக்கம், விலைவாசி உயா்வு என பொதுமக்களும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிவால் கடும் மனஉளைச்சலில் மாணவா்களும் வேலையின்மைப் பிரச்னையால் இளைஞா்களும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆனால் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வது எவ்வாறு என பிரதமா் மோடி பொதுமக்களுக்கு தொடா்ச்சியாக ‘மெலோடி’ உரைகளை வழங்கி வருவது வேடிக்கையாக உள்ளது’ என குறிப்பிட்டாா்.