நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மெலோனிக்கு மோடி அளித்த பரிசால் பார்லே நிறுவனப் பங்குகள் கிடுகிடு உயர்வு!

இத்தாலி பிரதமருக்கு பிரதமர் மோடி அளித்த மெலோடி சாக்லேட் பரிசால் பார்லே நிறுவனப் பங்குகள் உயர்ந்துள்ளது குறித்து...

News image

ஜார்ஜியா மெலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசளிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பார்லே நிறுவன இலச்சினை - எக்ஸ்

Updated On :20 மே 2026, 8:27 pm IST

அரசு முறைப் பயணமாக ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மொலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மெலோனி மற்றும் மோடி என இருவரின் பெயர்களையும் சேர்த்தால், மெலோடி என வருவதாக இணையத்தில் இதற்கு முன்பே பலர் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், தற்போது மெலோடி சாக்லேட்டுகளை மெலோனிக்கு பரிசாகக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இத்தாலி பிரதமர் மெலோனி விடியோவாகப் பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை இதுவரை 10 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதனால் சர்வதேச அளவில் பலர் மெலோடி சாக்லெட் குறித்து தேடத் தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்கள் முழுவதும் மெலோடி குறித்த பதிவுகள் அதிகரித்து வருகிறது.

இதன் விளைவு, இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. மொலோடி சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான பார்லேவின் பங்குகள் 5% வரை அதிகரித்துள்ளது.

பார்லே நிறுவனம் மெலோடி சாக்லேட்டுகளை மட்டுமின்றி, பார்லே-ஜி, மொனாக்கோ, கிராக்ஜாக், மேங்கோ பைட், பாப்பின்ஸ் போன்ற இனிப்புகளைத் தயாரித்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து எந்தவித ஏற்றத்தையும் சந்திக்காமல் இருந்த பார்லே, இத்தாலி பிரதமருக்கு பிரதமர் மோடி வழங்கிய மெலோடி சாக்லேட் பரிசால், 5% வரை ஏற்றம் கண்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ. 4.84 ஆக இருந்த நிலையில், பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி ரூ. 5 ஆக அதிகரித்தது. வணிக நேர முடிவில் கிடுகிடுவென உயர்ந்து ரூ. 17.44ஆக அதிகரித்தது. பலரும் நெஸ்லேவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

மெலோடி சாக்லேட்டுகளை 43 ஆண்டுகளாக பார்லே நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அதிகப்படியான ஏற்றத்தை பார்லே நிறுவனம் இன்று சந்தித்துள்ளது.

இரு நாட்டு பிரதமர்கள் நட்பு ரீதியாக பரிமாறிக்கொண்ட சிறிய பரிசு, ஒரு நிறுவனத்தின் லாபத்தில் ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய தாக்கத்திற்கு பார்லே நிறுவனம் உதாரணமாகியுள்ளது என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Summary

Parle stock jumps after PM Modi gifts Giorgia Meloni Melody toffees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.