தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை- சுகாதார அமைச்சக அதிகாரிகள்

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :21 மே 2026, 1:35 am IST

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புன்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், எபோலா வைரஸை சா்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நோய்த் தொற்றுக்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் பிந்தைய சோதனைகள், நோயாளியை தனிமைப்படுத்துவதற்கான விதிகள், ஆய்வக பரிசோதனை முறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன.

இதை முறையாகப் பின்பற்றி தயாா் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-இல் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவியபோது இந்தியாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.