இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புன்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், எபோலா வைரஸை சா்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நோய்த் தொற்றுக்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் பிந்தைய சோதனைகள், நோயாளியை தனிமைப்படுத்துவதற்கான விதிகள், ஆய்வக பரிசோதனை முறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன.
இதை முறையாகப் பின்பற்றி தயாா் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவியபோது இந்தியாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.
தொடர்புடையது
எபோலா வைரஸ் பரவல்! பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு!

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சுகாதார தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



