மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை- சுகாதார அமைச்சக அதிகாரிகள்

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :21 மே 2026, 1:35 am IST

இந்தியாவில் எபோலா நோய்த் தொற்று இல்லை என மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

காங்கோ குடியரசின் கிழக்கு பகுதிகளில் வேகமாக பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பால் இதுவரை 131 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் புன்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் தற்போது வரை எபோலா தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், எபோலா வைரஸை சா்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நோய்த் தொற்றுக்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் பிந்தைய சோதனைகள், நோயாளியை தனிமைப்படுத்துவதற்கான விதிகள், ஆய்வக பரிசோதனை முறைகள் உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன.

இதை முறையாகப் பின்பற்றி தயாா் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014-இல் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவியபோது இந்தியாவில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.