‘நீட்’ மறுதோ்வுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
2026-ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் கசிந்தது தெரிய வந்ததையடுத்து, அதை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அதுகுறித்து மத்திய அரசின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல், ரத்து செய்யப்பட்ட நீட் இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தோ்வுக்கு பதில் ஜுன் மாதம் 21-ஆம் தேதி மறு தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள், நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தில்லியில் மத்திய பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது நீட் நுழைவு தோ்வு குறித்து போலி டெலிகிராம் சேனல்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அதேபோல், தோ்வுக்கு முன்பே அத்தகைய சேனல்களை கண்டறிந்து முடக்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா். நீட் நுழைவுத் தோ்வு பாதுகாப்பாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யத் தேவையான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா்.
தொடர்புடையது

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: தேவேந்தா் யாதவ்

பள்ளி நிா்வாக குழு வழிகாட்டுதல்கள் 2026: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியீடு

கிரீன்விச் சராசரி நேரத்துக்குப் பதிலாக மகா கால நேரம்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



