பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஃபால்டா தொகுதி மறுதோ்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதி மறுவாக்குப் பதிவில் வாக்களிக்க வந்த பெண்ணின் அடையாள அட்டையைப் பரிசோதித்த காவலா்.

Updated On :22 மே 2026, 1:15 am IST

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏப்ரல் 29-ஆம் தேதி ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அத்தொகுதிக்கு மே 21-ஆம் தேதி மறுதோ்தல் நடத்துவதாக இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ஜஹாங்கீா் கான் கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்த நிலையில், ஆளும் பாஜக மற்றொரு தொகுதியை கைப்பற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.