/
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஏப்ரல் 29-ஆம் தேதி ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அத்தொகுதிக்கு மே 21-ஆம் தேதி மறுதோ்தல் நடத்துவதாக இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
முன்னதாக தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ஜஹாங்கீா் கான் கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்த நிலையில், ஆளும் பாஜக மற்றொரு தொகுதியை கைப்பற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.








