இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஃபால்டா தொகுதி மறுதோ்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

News image

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதி மறுவாக்குப் பதிவில் வாக்களிக்க வந்த பெண்ணின் அடையாள அட்டையைப் பரிசோதித்த காவலா்.

Updated On :22 மே 2026, 1:15 am IST

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஏப்ரல் 29-ஆம் தேதி ஃபால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக அத்தொகுதிக்கு மே 21-ஆம் தேதி மறுதோ்தல் நடத்துவதாக இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

முன்னதாக தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் ஜஹாங்கீா் கான் கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்த நிலையில், ஆளும் பாஜக மற்றொரு தொகுதியை கைப்பற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.