பெங்களூரு : கர்நாடக முதல்வராகத் தான் பதவியேற்பேனா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் வியாழக்கிழமை(மே 21) தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கடந்த தேர்தலில் வென்ற காங்கிரஸ் ஆட்சியமைத்து மூன்றாண்டுகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், அம்மாநில அரசு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் முதல்வரும் மாற்றப்படலாம் என்றும் இது குறித்து, காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவெடுக்கும் என்று உள்கட்சி வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகிய இருவரையும் தில்லிக்கு அழைத்து இது குறித்து, கட்சித் தலைமை ஆலோசனையில் ஈடுபடவிருப்பதாகவும் தாங்கள் எதிர்பார்ப்பதாக கர்நாடக காங்கிரஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிவகுமாரிடம், ‘முதல்வராகப் பதவியேற்பீர்களா?’ என்று சாமராஜநகரத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “காலமும் முகூர்த்தமும் பதில் சொல்லும்” என்றார்.
Summary
Karnataka Deputy Chief Minister D K Shivakumar reiterated on Thursday that time will answer whether he will become the CM of the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








