புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வதைக்கும் வெய்யில்.. நாட்டில் அதிக வெப்பம் பதிவான பகுதி இதுதான்! 118 டிகிரி பதிவு

வெய்யிலோ வெய்யில் என்று நாட்டு மக்களை கோடை வெப்பம் வதைத்து வருகிறது.

News image

குழந்தையுடன் குடைபிடித்து செல்லும் பெண் - PTI

Updated On :21 மே 2026, 11:44 am IST

கோடைக்காலம் தொடங்கியது முதலே, மே 20ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு சில பகுதிகளைத் தவிர்த்து வெப்ப அலை வீசியிருக்கிறது.

சென்னையில் நேற்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஒரு பகுதியில் பதிவாகியிருக்கிறது. அது எந்த நகரம், அப்பகுதி மக்கள் எப்படியிருந்திருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது.

நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா நகரில்தான் நேற்று கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று இந்த நகரில் பதிவான வெய்யில்அளவு 118 டிகிரி ஃபாரன்ஹீட். இது 4.5 டிகிரி அளவுக்கு இயல்பை விட அதிக வெப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, அடுத்து வரும் நாள்களிலும் இந்தப் பகுதியில் கடுமையான வெய்யில் இருக்கும், வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் பகுதியிலும் மிகவும் வெப்பமான நகராகப் பதிவாகியுள்ளது. இங்கு 115.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.

அடுத்தடுத்த இடங்களில் பிலானி, சுரு, ஆல்வார், கோட் போன்ற நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை உள்பட தமிழகத்தில் நேற்று கடுமையான வெப்பம் பதிவான நிலையில், நாட்டிலேயே தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் தாக்கியிருக்கிறது.

சென்னை மீனம்பாக்கதில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. வேலூர் - 106.88, திருத்தணி - 106.7, நுங்கம்பாக்கம் - 105.26 என பதிவாகியிருந்தது.

Summary

The scorching sun.. This is the hottest place in the country! 118 degrees recorded

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.