ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ட்ரக் ரக லாரி ஒன்று மோதியதில் 3 பேர் பலியாகினர்.
அதில், சம்பவ இடத்திலேயே பலியான நர்மா கராசியா என்ற இளைஞருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 24.
சிரோஹி மாவட்டத்தில் சிரோஹி - குஜராத் நெடுஞ்சாலையில் தபானி மோட் பகுதியருகே வியாழக்கிழமை(மே 21) காலை நேரிட்ட இந்த விபத்தில் நர்மா கராசியா, கோவிந்த் மற்றும் ரமேஷ் கராசியா ஆகிய 3 பேர் பலியாகினர். திருமணத்துக்கு தேவையான சாமான்கள் வாங்கச் சென்றுவிட்டு உறவினர்களான மேற்கண்ட மூவரும் வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் விபத்தில் சிக்கினர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபத்துக்கு காரணமான ட்ரக் ஓட்டுநரை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது ட்ரக்கை வழியில் நிறுத்திவிட்டு அந்த நபர் மாயமானார். இது குறித்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
Summary
Soon-to-be groom among 3 killed in trailer truck-motorcycle collision in Rajasthan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவர் பலி

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!

சாலை விபத்தில் இளைஞா் பலி: இருவா் காயம்
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



