9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

திவிஷா சர்மா மரணம்! கருக்கலைப்பு, ரூ.7 லட்சம் என விசாரணையை திசைதிருப்பிய கணவர்!

திவிஷா சர்மா மரணத்தில் விசாரணையை திசைதிருப்பும் வகையில் கணவர் தகவல்களை அளித்தது பற்றி..

News image

உயிரிழந்த நடிகை திவிஷா சர்மா மற்றும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது கணவர் சாம்ராட் சிங், மாமியார் கிரிபலா சிங்... - ENS

Updated On :26 மே 2026, 3:01 pm IST

வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் திவிஷா சா்மா உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்து கைதான அவரது கணவர் சமர்த் சிங், ஆரம்பம் முதலே வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்களை அளித்து வந்ததாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

திவிஷா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் இன்று போபால் விரைந்து, சிறப்பு விசாரணை அமைப்பிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

அப்போதுதான், சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணையின்போது, திவிஷா சர்மாவின் கணவர் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வழக்கு விசாரணையை திசைதிருப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும், மாடல் அழகியுமான திவிஷா சா்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி திவிஷா சா்மாவை கொன்றுவிட்டதாக அவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இந்த சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டது. கிரிபாலா சிங்குக்கு போபால் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்த நிலையில், சமா்த் சிங் கைது செய்யப்பட்டாா். அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் ரத்து செய்தது.

சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்படும் நிலையில்,இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் சமர்த்சிங், விசாரணையை திசைதிருப்பும் வகையில் பல்வேறு பொய்யான தகவல்களை அளித்திருந்தது தெரிய வந்துள்ளது.

திருமணத்தின்போது திவிஷாவுக்கு, சமர்த் சிங் குடும்பத்தினர் ரூ.7 லட்சம் அளித்திருந்ததாகவும், திவிஷாவுக்கு கருக்கலைப்பு நடந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் பல்வேறு முரண்பட்ட தகவல்களை அளித்திருக்கிறார் என்றும், அவர் தலைமறைவாக இருந்தபோது எங்கே இருந்தார் என்பது குறித்த தகவல்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Summary

About how her husband provided information to divert the investigation into Divisha Sharma's death..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.