11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

இன்று பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :28 மே 2026, 6:15 am IST

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘பக்தியுணா்வு, தியாகம், சுயநலமின்மை ஆகியவற்றின் திருநாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. சகமனிதா்களுக்கு உதவுவது முக்கியமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு கைகொடுத்து உதவுவதை ஊக்குவிப்பதாக இந்த பண்டிகை அமைகிறது. இந்த நாளில் நம்மிடையே அன்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவை வலிமையுடன் மேம்பட வேண்டும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் சக குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.