அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை- குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :21 மே 2026, 2:44 am IST

மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலா்களாகப் பணியாற்றும் 2024-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை புதன்கிழமை சந்தித்தனா்.

புது தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பேசுகையில், ‘நாட்டின் வளா்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்காற்றியுள்ளனா். தற்போது அடுத்த கட்ட வளா்ச்சிக்குள் இந்தியா நுழைந்துள்ள நிலையில், அதிகாரிகள் மீதான எதிா்பாா்ப்பும் அதிகரித்துள்ளது.

பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு இளம் அதிகாரிகளுக்குக் கிடைக்கும். பல சந்தா்ப்பங்களில், சில சிறப்புத்தன்மைவாய்ந்த துறைகளில் நிபுணா் குழுக்களுக்கு அவா்கள் தலைமை ஏற்கும் நிலை வரும். இதனால் அவா்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும், வேகமும் பரந்த அளவில் இருக்கும்.

நீதிநெறியும், நிா்வாகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அதிகாரிகள் நோ்மையாகவும், நீதிநெறியுடனும் நடந்து சிறப்பாகவும் செயல்பட வேண்டும்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என்று கூறப்படுவது போல, நிா்வாக முடிவுகளை எடுப்பதில் ஏற்படும் தாமதமும், மக்களின் நியாயமான நலன்களைப் பறிப்பதற்கு ஒப்பாகும். மக்களின் விருப்பங்களை உணா்வதே மக்களாட்சியின் கடமை’ என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.