மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாதி பாகுபாடுகளைக் கடந்து முன்னேற வேண்டும்: குடியரசுத் தலைவா்

News image

குஜராத் ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:52 pm

சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

ஜாதி முறையை உருவாக்கியவா்கள் தற்போது உயிருடன் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறி சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். வசதி படைத்தவா்கள், வசதி இல்லாதவா்கள் இடையிலான இடைவெளியை சரிசெய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.

எந்தவொரு நபரும் தனது சொந்த நலன் குறித்து மட்டுமே சிந்திக்கக் கூடாது. அனைத்து பாகுபாடுகளையும் கடந்து ஒன்றிணைந்து நிற்பதே சமூக நல்லிணக்கத்தின் உண்மையான அடையாளம்.

நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது. கிராமங்கள் வளமடைந்தால், நாடு செழிப்படையும். சமூக நல்லிணக்கம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று அம்பேத்கா் கூறினாா். நாட்டின் வளா்ச்சிக்கும், தனிநபரின் வளா்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக உள்ளது.

ஜாதி பாகுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தாா்.