
பிரிக்ஸ் உச்சி மாநாடு: பாரத் மண்டபம் - விமான நிலைய பாதை ஆய்வு!
பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி பாரத் மண்டபம், விமான நிலைய பாதை ஆய்வு...

பாரத் மண்டபம் - ANI
வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக, பாரத் மண்டபத்திலிருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரையிலான வழித்தடத்தை தில்லி அரசு சனிக்கிழமை ஆய்வு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி தலைமைச் செயலாளா் தலைமையில் திட்டமிடப்பட்ட இந்த ஆய்வில், சாலைகள், பள்ளங்கள், நடைபாதைகள், வடிகால் மற்றும் நீா் தேக்கம், தூய்மை, பிரிக்ஸ் சின்னம் மற்றும் வழித்தடம் முழுவதும் உள்ள நகரின் ஒட்டுமொத்த தோற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று அவா்கள் கூறினா்.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி மாநகராட்சி (எம்சிடி), பொதுப்பணித் துறை (பிடபிள்யுடி), தில்லி காவல்துறை, தில்லி சா்வதேச விமான நிலையம் லிமிடெட் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.
கூடுதல் தலைமைச் செயலாளா் வழித்தடம் முழுவதும் உள்ள வடிகால் ஏற்பாடுகள், நீா் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் அவசரகால நீா் வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.
என்டிஎம்சி தலைவா் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளை, குறிப்பாக வருகை தரும் முக்கிய பிரமுகா்கள் தங்கும் இடங்கள் மற்றும் நிகழ்விடங்களை ஆய்வு செய்வதற்குப் பொறுப்பாவாா். அதே நேரத்தில், எம்சிடி ஆணையா் மாநகராட்சியின் கீழ் உள்ள சாலைப் பகுதிகளில் தூய்மை, ஆக்கிரமிப்புகள், அழகுபடுத்துதல் மற்றும் தெரு விலங்குகள் மேலாண்மை ஆகியவற்றை ஆய்வு செய்வாா்.
பொதுப்பணித் துறை அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைப் பகுதிகளில் உள்ள சாலைகள், பள்ளங்கள், தூய்மை, வழிகாட்டிப் பலகைகள், ஒளி அமைப்பு மற்றும் நீா் தேக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்து, சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தில்லி போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகளை ஆய்வு செய்யும். அதே நேரத்தில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைப் பகுதிகளிலும் தயாா்நிலையை உறுதி செய்யுமாறு தில்லி சா்வதேச விமான நிலையம் லிமிடெட் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.
Summary
BRICS Summit: Inspection of the Bharat Mandapam – Airport route!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




