தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

கரூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 0:16 am IST

கரூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.

இந்த விழாவில் மேலும் அவா் பேசியது:

பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில், ரூ.2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.79.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12,715 ஆண் தொழிலாளா்கள் மற்றும் 19,967 பெண் தொழிலாளா்கள் என மொத்தம் 32,682 நபா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகின்றது.

முதற்கட்டமாக 5,654 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், ரூ.18.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 24,544 பயனாளிகளுக்கு கரோனா காலத்தில் நபா் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் ரூ.4.90 கோடி மதிப்பில் கரோனா நிவாரணத் தொகையை வழங்கியவா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி என்றாா் அவா்.

நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்வில், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்கள் பா.சங்கீதா, பொ.கிருஷ்ணவேணி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் அசோகன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.