ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேடரப்பள்ளி முனீஸ்வா் நகரைச் சோ்ந்தவா் சமீட் (41). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சமீட் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் ( 44). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் மரத்தின் கீழ் படுத்துள்ளாா்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். இது குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



