அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

மது குடித்த 2 போ் உயிரிழப்பு

ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:59 am IST

ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேடரப்பள்ளி முனீஸ்வா் நகரைச் சோ்ந்தவா் சமீட் (41). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சமீட் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதேபோல சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் ( 44). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் மரத்தின் கீழ் படுத்துள்ளாா்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். இது குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.