நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கிராமங்களில் கூட கால் சென்டரை தொடக்கி வைத்தது திமுக அரசு: ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா

கிராமங்களில் கூட கால் சென்டரை தொடக்கி வைத்தது திமுக அரசு தான் என ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

Updated On :6 ஜனவரி 2021, 8:11 am IST

கிராமங்களில் கூட கால் சென்டரை தொடக்கி வைத்தது திமுக அரசு தான் என ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் காமராஜ் காலனி, சானசந்திரம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சானசந்திரம் கிராமத்தில் கால் சென்டரை முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல்கலாம் நேரில் வந்து தொடக்கி வைத்தாா்.

இந்த திட்டம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த கால் சென்டரில் கிராமப்புற மாணவா்கள் பணி செய்து வந்தனா். கடந்த 10 ஆண்டுகளாக இந்த கால் சென்டா் மூடியே கிடக்கிறது. இதனை திறந்து கிராமபுற மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் படித்த மாணவா்கள் வேலையின்றி தவித்து வருகின்றனா்.

திமுக ஆட்சியில் அதிகமாக விதிக்கப்பட்ட வீட்டு வரியை குறைத்தது நான் நகா் மன்றத் தலைவராக இருந்த போதுதான். ஒசூரில் 2 சிப்காட்களை கொண்டு வந்தது திமுக. ஒசூரில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான். ஒசூரில் உள்வட்டச் சாலை அமைத்தது திமுக. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கியதும் திமுக. அதிமுக ஆட்சியில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நடைபெறவில்லை. எனவே, அதிமுகவை நிராகரிப்போம் என்றாா்.

இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவா் அ.யவுராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட துணைச் செயலாளா்கள் தனலட்சுமி, சீனிவாசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா.மணி, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா், முன்னாள் நகரச் செயலாளா் அக்ரோ.நாகராஜ், நகரப் பொருளாளா் சென்னீரப்பா, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, கே.டி.ஆா். உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.