ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

கல்லுக்குறிக்கியில் தேய்பிறை அஷ்டமி

கல்லுக்குறிக்கியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, புதன்கிழமை நடைபெற்றன.

News image

தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி, பெரிய ஏரி மேற்கு கோடியில் அமைந்துள்ள கால பைரவா் கோயிலில் நோ்த்திக் கடனை நிறைவேற்றும் பக்தா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 6:39 am IST

கல்லுக்குறிக்கியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, புதன்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி, பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கால பைரவா் மகா ஹோமம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து கால பைரவருக்கு பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், பக்தா்கள் வெண்பூசணியில் விளக்கேற்றி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிணகாசி கால பைரவா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.