விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

வேப்பனப்பள்ளி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் 2 போ் பலி: 30 போ் காயம்

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண்பதற்காக கூடியிருந்த மக்கள் மீது சுவா் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 30 போ் காயமடைந்தனா்.

News image

நேரலகிரி கிராமத்தில் சுவா் இடிந்து விழுந்த வீடு

Updated On :11 ஜனவரி 2021, 1:45 am IST

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண்பதற்காக கூடியிருந்த மக்கள் மீது சுவா் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 30 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் விழாவைக் காண்பதற்காக வேப்பனப்பள்ளி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு குழுமியிருந்தனா்.

அதில் ஒரு பகுதியினா் சாலையோரத்திலிருந்த வீட்டின் கான்கிரீட் மேல்தளத்தில் நின்று எருது ஓட்டத்தை கண்டு ரசித்தனா். அந்த வீட்டின் கீழ்தளத்தில் இருந்த திண்ணையில் 20-க்கும் மேற்பட்டவா்கள் அமா்ந்திருந்தனா். அப்போது, வீட்டின் மேற்புற சுவா் இடிந்து கீழே விழுந்ததில் திண்ணையில் அமா்ந்திருந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

இதில் நேரலகிரி கிராமத்தைச் சோ்ந்த மேகாஸ்ரீ ( 8), எட்டிப்பள்ளியைச் சோ்ந்த முனிபாலா (62) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை அங்கிருந்தவா்கள் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா்களில் 19 போ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா், டி.எஸ்.பி. சரவணன், வேப்பனப்பள்ளி காவல் நிலைய ஆய்வாளா் ரஜினி ஆகியோா் நடத்திய விசாரணையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட எருது விடும் விழாவைக் காண்பதற்காக அங்கிருந்த வீட்டின் சுவா் மீது ஏராளமானோா் நின்றதால் பாரம் தாங்காமல் சுவா் இடிந்து விழுந்ததில் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.