அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: எம்பி கவலைக்கிடம்; 6 பேர் பலி

டக்ஸன், அரிஸோனா ஜன.9: அமெரிக்கா அரிஸோனா மாகாணத்தின் டக்ஸனில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் ஜனநாயகக் கட்சி எம்பியான கேப்ரியல் கிஃப்பர்ட்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 9 வயது சிறுமி உள்ளிட்ட 6

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

டக்ஸன், அரிஸோனா ஜன.9: அமெரிக்கா அரிஸோனா மாகாணத்தின் டக்ஸனில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில் ஜனநாயகக் கட்சி எம்பியான கேப்ரியல் கிஃப்பர்ட்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். 9 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கியால் சுட்டவர் ஜரீத் லீ லானர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறிய ஷெரீப் கிளாரன்ஸ் டுப்னிக், போலீஸ் விசாரணையின்போது அவர் எதுவும் கூறவில்லை என்றார்.

இந்த இடத்துக்கு அவர் வந்ததற்கு ஏதாவது காரணம் இருக்கும் என நம்பப்படுவதாக ஷெரீப் கூறினார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கிஃப்பர்ட்ஸ் முதலில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் மூளையின் ஒருபகுதியில் குண்டு பாய்ந்திருந்தாலும் அவரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் உள்ளார். எனினும் அவரைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தலைவர் பீட்டர் ரீ தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.