இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் நுழைந்தனரா?
ஸ்ரீநகர், ஜன.9- கடந்த வருடம், காஷ்மீர் கிராமம் ஒன்றில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2010, அக்டோபர் மாதம் காஷ்மீரில் லே மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில்


ஸ்ரீநகர், ஜன.9- கடந்த வருடம், காஷ்மீர் கிராமம் ஒன்றில் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010, அக்டோபர் மாதம் காஷ்மீரில் லே மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கொம்பிர் என்னும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்த கொம்பிர் பகுதியில் காஷ்மீர் மாநில ஊரகத் துறை சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும் அதன் ஒப்பந்ததாரரையும் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு சீன ராணுவத்தினர் மிரட்டியுள்ளனர்.
இத்தகவல்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...