இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன் வீராசாமியிடம் கேட்டபோது, கடந்த ஓராண்டாக சனிக்கிழமையில் அபிஷேகம் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் விரும்பி சனிக்கிழமையில் அபிஷேகம் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டதால் மீண்டும் தொடங்கினோம். காலை 5, 6 மற்றும் 7, பகல் 12, மாலை 5.30 மணி என்ற கணக்கில் 5 வேளை அபிஷேகம் செய்யப்படும். அப்போது சிறிது நேரம் பொது தரிசனம் நிறுத்தவேண்டியிருக்கும். இதை பக்தர்கள் பொருத்துக்கொண்டுதானாகவேண்டும். கால் மணி முதல் அரை மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க முடியவில்லையென்றால் அதை எப்படி கருதுவதென்றே தெரியவில்லை. மேலும் மழைவேண்டி கோவிலில் உள்ள நந்திக்கு வருண ஜபம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது. இதுவும் கோவிலை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் வேண்டுகோள்படி செய்யப்படுகிறது என்றார்.