ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் : 1500 பேர் கைது

சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :17 டிசம்பர் 2012, 7:23 am

தங்கராஜா

சேலத்தில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1500 பேருக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கக் கூடிய மதுக்கடையில், இன்று காலை பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில், பாமக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இரா. அருள் முன்னிலையில் பெண்கள் உட்பட ஏராளமான பாமகவினர், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்திய சேலம் மாநகர உதவி காவல்துறை ஆணையர் ரவிசங்கர் தலைமையிலான போலிஸார் 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர்.

இதேப்போல, சேலம் நகரத்தில் 30 இடங்களில் நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டத்தில், 100 பெண்கள் உட்பட 483 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சேலம் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் 30 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் கைதானார்கள்.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 200 பேர் பெண்களும் அடங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.