தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரூரில் காணமால் போன சிறுவன் சடலமாக மீட்பு

கரூரில் காணாமல் போன சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக போலீஸார் மீட்டனர்.

News image
Updated On :19 டிசம்பர் 2012, 10:42 am

கண்ணன்

கரூரில் காணாமல் போன சிறுவனை கிணற்றிலிருந்து சடலமாக போலீஸார் மீட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அயூப் அலி ஆசிப், தனது மனைவி ரெஹீமா, மகன் அஸ்னூர் காஜி (5) ஆகியோருடன் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஆறுமுகம் நகரில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 17-ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அஸ்னூர் காஜி காணாமல் போனான். இதுகுறித்து, அயூப் அலி ஆசிப் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு காவல் நிலைய் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திறந்தவெளி கிணற்றில் அஸ்னூர் காஜி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)செட்ரிக் மானுவல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.