ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

திருவாரூரில் விவசாயம் பொய்த்துப் போனதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :22 டிசம்பர் 2012, 6:27 am

தங்கராஜா

திருவாரூரில் விவசாயம் பொய்த்துப் போனதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் அருகே கடம்பங்குடியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் இன்றி, மழையும் பெய்யாமல், விவசாயம் பொய்த்து போனதால், மன வேதனை அடைந்ததாகவும், அண்மையில் தனது சகோதரிக்கு திருமண ஏற்பாடு செய்திருந்ததாகவும், விவசாயம் பாதிக்கப்பட்டதால் தேவையான பணம் இல்லாததால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதற்கிடையே நேற்று இரவு பூச்சி மருந்தைக் குடித்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திசேல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்திவேல் எம்.ஏ. படித்தவர். திருமணம் ஆகாதவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.