இதுபோன்ற பாதிப்பு தமிழகப் பகுதியிலும் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம், விவசாயத் தொழிலாளருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் தரவேண்டுமென தமிழக அரசை திமுகத் தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் வரை அமல்படுத்தப்பட்டால், புதுவை மாநிலத்தின் மாவட்டமான காரைக்கால் விவசாயிகளும் அதே பயனை அடைய அனைத்து சாத்திய்கூறுகளும் உள்ளன. பயில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேராத குத்தகை சாகுபடிதாரர்களும் அரசின் பயனை பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். எனவே புதுவை முதல்வர், திமுக தலைவர் கோரிக்கையை புதுவை மாநிலத்தில் காரைக்கால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றவேண்டுமென காரைக்கால் திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் நாஜிம்.